Monday, July 19, 2010

ஹைக்கூsss..

               
                          இவற்றை ‘ஹைக்கூ’ என்று சொன்னால் ஜப்பானிய சாமிக்கள் கண்ண குத்திரும்.. ஏனென்றால் ‘ஹைக்கூ’ எழுத பல விதிமுறைகள் உண்டு. மேலும் ‘ஹைக்கூ’ ஜப்பானிய கவிதை வடிவம்.. அதை தமிழில் செய்வது ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் பல சிறிய, பெரிய கவிஞர்கள் முயற்சி செய்துள்ளனர். புத்தகமும் வெளியிட்டுள்ளனர். அவை எல்லாம் மேற்சொன்னபடி முயற்சிகளே.. பெரும்பாலும்.. அவை உண்மையிலேயே ‘ஹைக்கூ’ இல்லை. இதுவும் கூட ‘ஹைக்கூ’ இல்லை. ‘ஹைக்கூ’ மாதிரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.. ‘ஹைக்கூ’வின் முக்கிய அம்சம்.. தான் பார்த்ததை, எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல உள்ளதை உள்ளபடி சொல்வது.. அதை படிக்கும் ரசிகனும் அதை உணர்ந்தால் அந்த கவிதையின் வெற்றியாக அது கொள்ளப்படும்.. நான் முயற்சி செய்தவை சில உங்கள் பார்வைக்கு...




ஓய்ந்தது மழை
தேங்கி நின்ற நீரில்
சிதறிய வானத்துண்டுகள்







காரை பெயர்ந்த
பழைய சுவற்றில்
சித்திரங்கள்







கடக்கும் ரயில் பெட்டிகளின்
எண்ணிக்கை விட்டுப் போனது
ஜன்னலோரமாய் பெண்








இலைகள் விடுபட்ட மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம்









அந்த வீட்டைக்
கடக்கும் பொழுதெல்லாம்
அதே வாசனை








இந்த மழைக்காற்று
சுகமாய் இல்லை
சிகரெட் புகை










கனவு கைகூடும் நேரத்தில்
எங்கோ அடிக்கிறது
அலார கடிகாரம்









படிவைத்து மணல் வீடு
பக்கத்திலே பள்ளிச் சிறுமி
முன்னேறும் கடலலை











விடிந்த பின்னும்
அணைக்க மறந்த தெருவிளக்குகளோடு
நிலா

2 comments: