Monday, July 19, 2010

பாடத்திட்டம் (கவிதை)

இன்று வகுப்பறையில்
பூனையிடமிருந்து தப்பி வந்த எலி ஒன்று
தமிழய்யரவிடம் தஞ்சம் புகுந்தது

“உயிர்களை கொல்வது பாவம்” என்று
பாடம் நடத்தி
பரிவுடன் பக்கத்தில் வைத்து பாதுகாத்தார்

அடுத்த பாடவேளைக்கான மணியடித்தது தான் தாமதம்
வேகமாய் வந்த விலங்கியல் ஆசிரியர்
எலியின் கைகால்களை விரித்து
ஆணியடித்து அறுத்து அழகாய் விளக்கினார்
“இதுதான் இதயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்”



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

1 comment: