Monday, July 19, 2010

தேடலும்.. தொலைதலும்.. (கவிதை)

கவிதை தேடி அலைந்த ஒரு காலத்தில் தான்
நான் உன்னைக் கண்டேன்

அப்போது முதல்
நான் தொலைந்து போனேன்
அதன் பின்
என்னைத் தேட ஆரம்பித்தேன்
என்னைத் தேடும் தேடலின்போதெல்லாம்
நீயே கிடைத்தாய்

பின் அதுவே சுவாரஸ்யமாகிப் போக

என்னைத் தேடுவதை விடுத்து
உன்னைத் தேட ஆரம்பித்தேன்

நீயோ நான் தேட ஆரம்பித்தவுடன்
தொலைந்து போயிருந்தாய்

இருந்தும் தேடிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால்

கவிதைகள் மட்டுமே கிடைக்கின்றன

No comments:

Post a Comment