Monday, July 19, 2010

நானும், இவளும், அவளும்... (கவிதை)

ஒவ்வொருமுறை கொசுவர்த்தி சுருளின்
சாம்பல் உதிர்ந்து விழும்பொழுதும்
சற்றே பிரகாசமாய்
இவள் முகம்

எங்களின் இன்பக் களியாட்டத் தருணங்களின்
பெருமூச்சுக் காற்றின் ஓசைக்கிடையே
எழும் பேச்செல்லாம்
அவளை பற்றியதாகவே இருக்கும்

அவளது அழகு..
அவளது பார்வை..
அவளது ஈர்ப்பு..
அவளது காதல்..
இப்படியாக..

அவளிடையே எனக்குள்ள காதலின் நெருக்கம்
இவளிடையே எனக்குள்ள இடைவெளியி்ல் விளக்கப்படும்

எங்களின் காதலின் ஆழம்
இவளின் ஆழத்தில் அறிவிக்கப்படும்

இப்படித்தான்
அவள் மீதுள்ள எனது காதல்
இவளுக்கு சொல்லப்பட்டது.. படுகிறது

1 comment: