Monday, July 19, 2010

சூழல் (கவிதை)

காலைப் புல்லின் பனித்துளி..
பூவைச் சுற்றும் பட்டாம்பூச்சி..

சாரல் மழை வானவில்..
மழைநீரில் காகித ஓடங்கள்..

குழந்தையின் தளிர்நடை..
அழகிய பெண்ணின் புன்னகை..

சாயுங்கால வானம்..
கடற்கரை காலடிகள்..

இலையுதிர்கால மரத்தடி..
மெழுகுதிரி வெளிச்சத் தனிமை..

மொட்டைமாடி நிலவு..
சின்னச் சின்னக் கண்ணீர்த்துளிகள்..

“சே... எனக்குத்தான் கவிதையெழுத வரவில்லை”



.

1 comment:

  1. என்ன ஒரு கவிதை!

    ReplyDelete