Monday, July 19, 2010

காதலின் இரண்டாம் நிலை (கவிதை)

அங்கங்கு கைபட..
அருகில் வந்து உரசி நிற்க..
கைகள் பிடித்து எழுதி காண்பிக்க..
பாதி தின்ற பண்டம் பகிற..

வரம்பு மீறும் வார்த்தைகள் பேச..
எல்லை தாண்டி ஏளனம் செய்ய..

உரிமையோடு சில உடைமைகள் வாங்க..
ரகசியமாய் சில உண்மைகள் உளர..
நமக்குள் இருப்பது
நட்பா, காதலா, காமமா என்றால்

போகிற போக்கில் சொல்லிச் செல்கிறாய்
‘சும்மா’ என்று

No comments:

Post a Comment