Monday, July 19, 2010

காதலுதிர்காலம் - 2 (கவிதை)

செல்பேசியின் ஒவ்வொரு அழைப்பிலும்
உன்னையே எதிர்பார்க்கும் மனம்

தோன்றும் எண்களுக்கெல்லாம்
உனதுருவம் கொடுத்துப் பார்க்கும் கண்கள்

காதலை எதிர்பார்த்து
ஓடிப்போய் ஆவல் எடுக்கும்

எதிர் முனையில்

நாராசமாய் ஒரு குரல்
நலம் விசாரிக்கும்

‘நாசமாய் போ’ என பதிலளித்துவிட்டு
இதயம் இன்னும் கொஞ்சம் செத்துப் போகும்.

No comments:

Post a Comment