Monday, July 19, 2010

அம்மு அந்தாதி - 4 (கவிதை)

.

ஒவ்வொரு மழையின் போதும்
நனைய நீ அடம்பிடிப்பாய்

அன்பாய் அதட்டி மறுக்கும்
அம்மாவின் குரல்
மேகமெல்லாம் வருத்தப்பட்டு
கண்ணீர் சிந்தி வான் திரும்பும்..

அன்று நீ வீதி வழி
வீடு திரும்பிக் கொண்டிருந்தாய்
தொலைவில் பார்த்த மேகக்கூட்டம்
ஓடி வந்து சூழ்ந்து கொண்டது
பின்
மழை உன்னில் நனைந்து சென்றது



.

No comments:

Post a Comment