Monday, July 19, 2010

காவல் தெய்வம் (கவிதை)

ஊருக்கு வெளிய
ஒசரமா ஒரு சாமி

காரை பேந்து
கலர் கலரா பெயிண்டடிச்சு

ஒரு கையில வெட்டருவா
அதுல அங்கங்க பறவையெச்சம்

மறுகையில தீச்சட்டி - அதுல
குருவியிருக்கு குடும்பமா கூடுகட்டி

செல்லாத சில காசோட
சீலுவச்ச உண்டியலு
வேட்ட நாயி சாமி கூட
ஒத்தகாலு ஒடஞ்சு போயி
எப்பவோ போட்ட மாலை
நாரு மட்டும் கழுத்துல

பொங்க வச்சு பூச செய்ய
வரும் சனங்க வருசத்துக்கொருக்க

புயலையும் மழையையும்
பொறுக்கத்தான் செய்யனும் சாமி

பாவம் சனங்க என்ன செய்யும்
ஊர காக்கும் காவல் தெய்வம்

No comments:

Post a Comment