Monday, July 19, 2010

விதி (கவிதை)

நாளை என் கதையொன்று பிரசுரமாகும் நாள்

நாளை எங்கள் தெருமுனை கிரிக்கெட் பைனலுக்கு
விளையாட வருவதாய் சொல்லியிருக்கிறேன்

நாளை ‘ரேங்க் கார்டு’ தரும் நாள்
விஷேசமாய் இந்தமுறை ‘ஆல் பாஸ்’
பக்கத்து பெஞ்ச் ஹரி
நாளை என்னிடம் வாங்கிய இருபது ரூபாயைத்
திருப்பித் தருவதாய் சொல்லியிருக்கிறான்

நான் ‘சைட்’டடிக்கும் லஷ்மி
நாளை என் காதலுக்கு
பதில் சொல்லவிருக்கிறாள்
ஐயோ!
இப்போதா வந்து தொலைய வேண்டும்
எனக்கிந்த சாவு



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

1 comment: