Monday, July 19, 2010

காதலுதிர் காலம் (கவிதை)

விரல்கள் கடித்து வெட்கப்படு

கண்கள் விரித்து ஆச்சரியம் காட்டு
கைகள் அசைத்து சைகை தெரிவி

சொற்களில் கொஞ்சம்
புன்னகையில் மீதம் பேசு
கைகள் குலுக்கி செல்லமாய் கிள்ளு
அபிநயத்தோடு பாடல்கள் பாடு

‘அண்ணா’வென அழைத்து
அசட்டுத்தனமாய் சிரி

புகைப்படம் எடுக்கையில்
முன் வந்து முகம் சுழி

உணவோடு
என்னையும் பகிர்ந்து உண்

உயரத்திலே வளர்ந்தாலும்
குழந்தையாய் இரு

‘வராதே’ எனச் சொல்லி காதல் வந்ததை சொல்
தொலைபேசியை கொஞ்சம் தூதனுப்பு
ரகசிய பார்வைகள் பார்
விருப்பம் ஒன்றானாலும் குறும்புக்கேனும் மறுத்திடு

நான்கைந்து நாட்கள் காதலி - அதன் பின்
நட்பும்கூட இல்லையென சொல்.

1 comment: