Monday, July 19, 2010

நாளும் நடப்பவை (கவிதை)

சாலையில்..
எதிர்ப்பட்டு கையேந்தும் பிச்சைக்காரனை
ஏளனமாய் ஆராயும் மனம்

உண்மையில் ஊனமா..
ஊரை ஏமாற்றுகிறானா..

காசு போடுவதா..
கண்டுகொள்ளாமல் விடுவதா..
போடுவதானால் எவ்வளவு..

சில்லரையாக இருக்குமா..
சில்லரையேனும் இருக்குமா..

யாரேனும் கவனிக்கிறார்களா..
எனைப்பற்றி ஏதேனும் நினைப்பார்களா..

இப்படியாய் யோசனையில் நான் நின்றிருக்க..
அவன் என்னை விட்டு நகர்ந்திருந்தான்


.

No comments:

Post a Comment