Monday, July 19, 2010

காதலுதிர்காலம் - 4 (கவிதை)

நீ திருமணமாகிப் போகும் நாளில்

உன் வீட்டில்
மறந்து போய் விட்டுச் சென்ற
நம் காதல் கணங்களை
ஓடியோடி சேகரிக்கிறேன்

காலை எழுந்து..
கணவனுக்கு காபி கொடுத்து..

உணவாக்கி..
உடைக்க சுறுக்கெடுத்து..

பையனை பள்ளிக்கு அனுப்பி..
பக்கெட் துணிகள் துவைத்து..

பாத்திரம் கழுவி எடுத்து..
பால் பாக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி..

உணவை உண்டு முடித்து..
மிஞ்சும் உணவை சுண்ட வைத்து இறக்கி..

மங்கையர் மலரில் கதைபடித்து..
மாலை கோலத்திற்கு குறிப்பெடுத்து..

பின்
மதியம் போடும் குட்டி தூக்கத்திற்கு முன்

நினைவு வந்து நீ கேட்டால் கொடுக்கலாம் என்று


.
(கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.. So..கருத்து சொல்லுங்க..)


.

No comments:

Post a Comment