Monday, July 19, 2010

காதலுதிர்காலம் - 3 (கவிதை)

உச்சிவெயில் நாள் ஒன்றில்
வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும்

தெருநாய்கள் நிழல் பார்த்து
அங்கங்கு படுத்துறங்கும்

சூரியன் மட்டும் எனைத்தேடி வந்து
தலையில் கொட்டிவிட்டு சிரித்துப் போகும்

துரித உணவகங்களும் தேனீர் கடைகளும்
அருகில் வராதேயென அனல் அடிக்கும்

உன் வீதிகடக்கும் போதெல்லாம்
பாதங்களின் வேகம் பாதியாய் குறையும்

சாலைகளில் தெரியும் கானல்நீர் போல்
உன் நினைவுகள் மேலெழும்

எதிர்ப்படும் உருவங்களில் எல்லாம்
உன் முகம் தேடும் கண்களுக்கு

உள்மனம் மெதுவாய்ச் சொல்லும்..
சின்னதாய் சில கொலைகள் செய்தால் தப்பல்ல என்று

No comments:

Post a Comment