Monday, July 19, 2010

முதல் கவிதை (கவிதை)

அது அம்மாவைப் பற்றியதாகவோ அல்லது
தாமரைப்பூவை பற்றியதாகவோ இருக்கலாம்

அதிகபட்சம் மூன்று வரிகளில்
ஓரிரு எழுத்துப் பிழைகளுடன் இருந்திருக்கும்
அது எப்படித் தோன்றியிருக்கும்..? தெரியாது
எங்கேயேனும் கேட்டதை எழுதியிருக்கலாம்
எதையாவது படித்ததன் பாதிப்பில் எழுதியிருக்கலாம்
அது இப்போது ஞாபகமில்லை
ஆனால்..

ஒவ்வொரு கவிதையின் கடைசி வரியை முடிக்கும் போதும்
நெஞ்சில் ஓர் ஓரமாய் உறுத்தும்

“அந்த கவிதை எழுதிய நோட்டை இன்னும் கொஞ்சம்
பத்திரமாய் பாதுகாத்திருக்கலாம்” என்று..

No comments:

Post a Comment