Tuesday, July 20, 2010

ஆஃபர் (குட்டிகதை)

                             
                       ரம்யாவின் மொபைலில் இருந்த S.M.Sகள் தான் நீங்கள் கீழே பார்ப்பது.



ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..

Sender:
லூசு 2 (4.16 pm)


ரம்யா, லவ் கேட்டு வரக்கூடாது. ஆனா கேட்டாலும் வர மாட்டேங்குது.. அதான் வருத்தமா இருக்கு.. ப்ளீஸ் லவ் மீ..

Sender:
லூசு 2 (4.21 pm)


கணவனும் மனைவியும் ஒரு ஸ்கூட்டரின் இரண்டு சக்கரம் போன்றவர்கள். ஒன்று பஞ்சரானால் கூட அடுத்த அடி நகரமுடியாது. எனவே தான் புத்திசாலிகள் எப்போதும் ஒரு ஸ்டெப்னியை கூடவே வைத்திருக்கிறார்கள்.

Sender :
சுபா (5.47pm)


உனக்காகத் தான் நான் செல்போன் வாங்குனேன், சிகரெட்ட குறைச்சுகிட்டு காசு சேர்த்து லைப் டைம் வேலிடிட்டி போட்டேன். நீ என்னைய லவ் பண்ணுனா அப்புறம் 10 பைசால பேசலாம்னு யோசிச்சு உன் நெட்வொர்க்குக்கு மாறுனேன். எப்போதாவது மனசு மாறி போன் பண்ணுவ. ஒரு SMSஆவது அனுப்புவனு காத்திருக்கேன்... ஆனா இதுவரை பண்ணல..

Sender :
லூசு 2 (6.32 pm)



உனக்கு எப்படி வித்தியாசமா குட்மார்னிங் சொல்றது, குட்நைட் சொல்றதுனு யோசிக்கிறதுல டைம் வேஸ்ட் பண்ணிதான் படிக்க முடியாம போன எக்ஸாம்ல பெயிலானேன். ஆனா உன்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல.. ப்ளீஸ்.. ஒரே ஒரு SMS பண்ணு.. ‘ஐ லவ் யூ’னு..

Sender :
லூசு 2 (6.36 pm)


‘பார்க்’ல உட்கார்ந்து அப்பாவும் அவரோட குட்டி பையனும் பேசிக்கிட்டாங்களாம்..

சிறுவன் - அப்பா, நான் எப்படி பிறந்தேன்?
அப்பா       - ஆ..ங்.... இந்த பார்க்குக்கு ஒரு முறை நானும்  அம்மாவும்            வந்திருந்தோமா.. அப்போ ஒரு தேவதை வந்து ஒரு ஆப்பிள் கொடுத்துச்சு.. அத சாப்பிட்டதும் நீ பிறந்த..
சிறுவன் - நீங்க எப்படி பிறந்தீங்க?
அப்பா       - அதே மாதிரி தாத்தாவும், பாட்டியும் வந்திருந்தப்போ அந்த  தேவதை கொடுத்த ஆப்பிளை அவங்க சாப்பிட்டதும் நான் பிறந்தேன்..
சிறுவன் - அப்பா, எனக்கொரு சந்தேகம் நம்ம குடும்பத்துல யாருக்கும் மேட்.. *some text missing*

Sender :
அமுதா (7.29 pm)


ரம்யா, நான் என் லவ்வ எத்தனையோ முறை SMS மூலமா உனக்கு சொல்லிட்டேன். ஆனா நீ இதுவரை எந்த பதிலும் சொல்லல. இனியும் உனக்கு காத்திருக்கிறதுல பலன் இல்ல. உனக்கு உண்மையிலேயே என் மேல காதல் இருந்தா இன்னிக்கு நைட் 12 மணிக்குள்ள எனக்கு SMS பண்ணு. அப்படி பண்ணலைனா நீ என்னை லவ் பண்ணலைனு முடிவு செஞ்சுக்கறேன். அதுக்கு பிறகு என்ட்ட இருந்து SMS எதுவும் வராது. இது தான் என் கடைசி SMS. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் லவ் மீ...

Sender :
லூசு 2  (7.54pm)


ஹாய் ரம்ஸ்.. இன்னிக்கு SMS மன்னன் என்ன சொன்னான்?

Sender :
காயத்ரி (8.15pm)


நிஜமாவா? திடீர்னு எப்படி இப்படி? வேற ஏதும் ஆஃபர் வந்திருக்குமோ? சரி விடு. அவன் கிடக்கான் 5.3. ஆறறிவுல அவனுக்கு கொஞ்சம் கம்மிடி.

Sender :
காயத்ரி (8.18pm)


ஒரு பொன்னு அவளோட ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டி அவ பாய் பிரண்டு மேல போட்டபடியே சொன்னாள்..
“ நீ இப்போ என்னை உன் பொண்டாட்டி மாதிரி நினைச்சுக்க”
உடனே அவனும் தன்னோட ட்ரெஸ்ஸ எல்லாம் கழட்டிட்டு அவகிட்ட சொன்னான்..
“ஓ.கே. அப்போ ஒன்னு செய்.. ரெண்டு போ் டிரஸ்ஸையும் துவைச்சுடு”

Sender :
காயத்ரி (8.20pm)


ஹாய் செல்லக்குட்டி, என்ன பண்ற?

Sender :
9840865301 (10.23pm)


ஏன்.. ?

Sender :
9840865301 (10.24pm)


எப்படி டவுட் வந்தது?

Sender :
9840865301 (10.24pm)


ஓ.கே..
உம்ம்ம்ம்ம்மா..

Sender :
9840865301 (10.25pm)


இன்று முதல் நமது நெட்வொர்க்கில் ஒவ்வொரு  SMSக்கும் 50 பைசா வசூலிக்கப்படும். தடையில்லா சேவையை வழங்க இது அவசியமாகிறது. தொடர்ந்து எங்கள் சேவையை சிறப்பாக செய்ய உதவுவதற்கு நன்றி.

Sender :
ஏர்வாய்ஸ் (12.00 am)

2 comments: