Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Monday, August 2, 2010
முகம் (சிறுகதை)
ராமநாதன் உட்கார்ந்திருந்த சோபாவின் எதிரே டிப்பாயில் இருந்த ஹிண்டு பேப்பரை பெயருக்குக்கூட புரட்டவில்லை. டாக்டர் சோலைராஜ் பெயருக்குப் பின்னால் பெயரைவிட பெரிதாய் படித்த டிகிரிகள். மொத்தத்தில் அவர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவருக்குச் சொந்தமான க்ளினீக்கில் தான் ராமநாதன் கடந்த 32.. இதோட 33 நிமிடங்களாக இருக்கிறார். மணி மதியம் மூன்றை தொடவிருந்தது. இவருக்கு அடுத்து வந்த ஒருவர், இவரிடம் அனுமதி கேட்காமலேயே இவருக்கு முன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அந்த க்ளினிக்கின் உதவியாளர் ராமநாதன் முன் வந்து நின்று தலையைச் சொறிந்து கொண்டே ஆரம்பித்தார்..
“சார் இவங்களுக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகனுமாம். குழந்தை வேற வச்சிருக்காங்க. அதுவும் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா.. அதான்... அவங்க முதல்ல டாக்டர பாத்துட்டு...” என்று இழுத்தார்.
ஏதோ சொல்லவந்தவர்... “ம்..“ என்றார்.
“தேங்க்ஸ் சார்.. அடுத்து நீங்க தான்” என்றவாரே அவளிடம் சென்றார். ஏதோ அவளிடம் சொல்ல அவள் டாக்டரின் அறைக்குள் சென்றுவிட்டாள். 8 நமிடங்களுக்கு பின்னர் அவள் வெளிவர உதவியாளர் உள்ளே சென்றார்.
“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?” என்றார் டாக்டர்.
“மூனு பேர்..”
“மூனு பேரா” என்றவாரே வெளியே பார்த்தார். கதவிடுக்கின் வழியே ராமநாதன் முகம் தெரிந்தது. என்ன நினைத்தாரோ, “சரி கொஞ்ச நேரம் அவங்க வெயிட் பண்ணட்டும். அடுத்து ஆள் வந்துட்டேதான் இருப்பாங்க. அதுக்குள்ள நான் என்னோட ‘லஞ்ச்’ச முடிச்சிடுறே என்ன?” என்றார் மெலிதாய் சிரித்தவாரே..
ஏதோ சொல்ல வாயெடுத்தவர் ராமநாதன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு “சரி டாக்டர்” என்றார்.
9 நிமிடத்திற்குப் பின் சாப்பிட்டு முடித்தார் டாக்டர். ராமநாதன் உள்ளே அழைக்கப்பட்டு டாக்டரின் எதிரே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.
“சொல்லுங்க” என டாக்டர் சொன்னது தான் தாமதம்..
தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூட தோன்றாமல் படபடவென பேச்சை ஆரம்பித்தார்.
“டாக்டர் என்னையப் பார்த்தா எல்லாருக்கும் என்ன தோணுமோ தெரியல. கடையில போய் ஏதாவது வாங்கப் போனா எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியில தான் எனக்குக் கொடுக்குறான். நான் என்னவோ ஓசியில வாங்கற மாதிரி. கோவிலுக்குப் போனா அர்ச்சகர் கூட்டத்துல எனக்கு மட்டும் பிரசாதம் தரமாட்டார். இல்லைனா கொஞ்சமா, அதுவும் கடைசியில ஏதோ வேண்டா வெறுப்பா தருவார். ஆபிஸ்ல ஸ்டாப் யாருக்காவது கல்யாணம், பங்ஷன்னா என்ன கிப்ட் வாங்குறதுனு என்னைய கலந்துக்காமலேயே எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துடுவாங்க. வீட்டுல என் குழந்தைங்க கூட எதுனாலும் என் வொய்பத் தான் கேட்ட முடிவெடுக்கிறாங்க. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. என் முகத்தை பார்த்தா அவங்களுக்கு என்ன தோணுமோ தெரியல.. இதுக்கு என்ன டாக்டர் காரணம்?” என்றார் உடைந்த குரலில்.
கொஞ்ச நேரத்திற்கு முன் கதவிடுக்கின் வழியே இந்த ராமநாதனின் முகத்தைப் பார்த்த காட்சி டாக்டரின் நினைவுக்கு ஏனோ வந்தது.
.
அழுகை (சிறுகதை)
நான் செத்துட்டேன்கிறத என்னால நம்ப முடியல. ஆனா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. என்னைய எங்க வீட்டுக்கு முன்னால இருக்கிற திண்ணையில படுக்க வச்சு கால் பெருவிரலை சேர்த்துக் கட்டி, சந்தனம் பூசி, செண்டெல்லாம் தெளிச்சு – இந்த செண்ட் இருக்கே.. மட்டமான வாடை அடிக்கும். செத்தவங்களுக்குனே தனியா விக்கிறாங்க.. விலை கொறைச்சலா. கட்டை பாஸ்கரோட மாமா செத்தப்போ அவருக்கும் கூட இதே செண்ட்தான் போட்டாங்க. ரொம்ப காட்டமா இருக்கும். பத்தி கொளுத்தி, மாலை போட்டு, ஒரு விளக்கும் ஏத்தி வச்சிருக்காங்க.
என்னைய சுத்தி உட்கார்ந்துகிட்டு இந்த பொம்பளைங்க ஏன்தான் இப்படி அழுதுட்டு இருக்காங்களோ தெரியல. அதுலையும் நாலாவது வீட்டுல இருக்கிற கிழவி ஒப்பாரின்ற பேர்ல காது பக்கத்துல வந்து கத்துற கத்து இருக்கே.. நல்லவேளை நான் உயிரோட இல்ல. இல்லைன்னா இந்நேரம் என் காது கிழிஞ்சிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னால நான் தெருவுல கிரிக்கெட் விளையாண்டப்போ ‘லெக்’ சைடுல நான் அடிச்ச பந்து நேரா போயி இவ ‘லெக்’ல பட்டிருச்சு. அதுக்கு என்னலாம் திட்டுனா, எப்படியெல்லாம் சண்டை போட்டா.. இப்ப என்னனா.. “ரெண்டு நாளைக்கு முன்ன கூட சிரிச்சு, சிரிச்சு பேசுனானே”னு வாய் கூசாம பொய் சொல்றாளே... ‘ஒப்பாரி வைக்கும் போது கூட உண்மை பேச மாட்டாங்க போல. செத்தவன் எந்திரிச்சு வந்து சொல்ல மாட்டான்ற தைரியம்.’
என் கால்மாட்டுல உட்காந்து அழுதழுது முகம் சிவந்து, வீங்கிப் போயிருந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்குது. என் மேல அவளுக்கு ரொம்ப பிரியம். நான் எது கேட்டாலும் வாங்கித்தருவா. நேத்து நைட்டுல இருந்து அம்மா பட்டினி. இன்னிக்கு காலையிலேயும் எதுவுமே சாப்பிடல. அவ பாதிநாள் இப்படித்தான் இருக்கா...
எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா ஏதோ பேருக்கு சாப்பிடுவா.. நானும் அப்பாவும் இட்லி, தோசைனு சாப்பிட, அவளுக்கு எங்கயிருந்துதான் கிடைக்குமோ பாழாப் போன பழைய சோறு. “எம்மா.. தோசைக்கு கூட கொஞ்சம் போட்டு அரைக்கலாம்ல”னு கேட்டா, “மிஞ்சிப் போனா உங்க அப்பாகிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது.. அதுவும் போக இவ்வளவு சோத்தையும் தூரவா கொட்டுறது”னு எதிர் கேள்வி கேட்பா. “சரி எனக்கு வை”னு சொன்னா, “ம்கூம்.. வளர்ற பிள்ளை சூடா சாப்பிடனும்”னு மழுப்பிடுவா. இப்போ கூட பாருங்க தேவியக்கா கொடுக்கிற காபிய குடிக்கமாட்டேங்குறா. “அட.. அம்மா அதையாது குடிச்சுத் தொலையேன்.”
அப்பா, வெளிய பெஞ்சில ஒக்காந்திருக்கார். அவர் கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த்து. ஆனா அது அழுத்துனால வந்த்தில்லனு எனக்குத் தெரியும். பெரிய மாமா தங்கராசு தான் பாடைக்கு சொல்லுறது, மேளத்துக்கு சொல்லுறதுன்னு எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்காரு.
வாசப்பக்கம் இருந்த செம்பருத்தி செடிக்கிட்ட வச்சு ஒருத்தரு பாடை கட்டிக்கிட்டு இருக்காரு. அதுல மூனாவது குறுக்கு கம்பை சரியா கட்டாம விட்டுட்டாரு. பாடை கட்டுற மும்மூரத்துல அணைக்காம அவர் தூக்கி எறிஞ்ச பீடிய தங்கராசு மாமாவோட மக கலையரசி கவனிக்காம மிதிச்சுட்டு ‘ஸ்...ஸ்..’னு காலை தூக்கிகிட்டே நொண்டி, நொண்டி நடக்கா.. பாவமா இருக்கு.. இவளும் நானும் சின்ன வயசுல ஒரு தடவை ‘பருப்பு கடைஞ்சு’ விளையாடும் போது, ஒவ்வொரு விரலையும் சோறு, குழம்பு, கூட்டு, அப்பளம்னு சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம். சாப்ட்ட பிறகு ‘நண்டு வருது, நரி வருது’னு அவ இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிவிடும் போது அவ பாவாடை அவுந்து விழ.. அவ ‘ஓ’னு அழ.. அவ அழுவுறத பாத்து நானும் அழ... ஒரே சிரிப்பு தான்...
அட, கண்ணாடி சார் கூட என்னை பார்க்க வந்திருக்கார் போல.. அவர் எனக்கு கணக்கு பாடம் எடுக்கிறாரு. ‘கண்ணாடி சார்னு அவருக்கு பேர் வர ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு அவர் கண்ணாடி போட்டிருப்பாரு. இன்னொன்னு.. அவர் எப்ப பாத்தாலும் சட்டை பைக்குள்ள வச்சிருக்கிற சின்ன கண்ணாடி எடுத்து பார்த்து அடிக்கடி தலைய சீவிக்கிட்டே இருப்பாரு. இவரு எத்தனையோ தடவ என்னை முட்டி போட வச்சு கைய தூக்கச் சொல்லிட்டு பின்னாலயே அடிச்சிருக்காரு. அத நினைச்சு பார்த்தா இப்போ கூட லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. கூடவே தமிழய்யாவும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் அப்பாட்ட ஏதோ பேசுறாங்க..
“நல்ல பையன் சார். நல்லா படிப்பான். நான் அவன ஸ்கூல் பஸ்ட் வருவான்னு எதிர்பாத்தேன். படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும் அவன் தான் முதல்ல நிப்பான். நான் கூட சொல்லுவேன்.. “டேய்.. உங்கப்பா ஒரு போஸ்ட்மேனா இருந்து வெயில், மழைனு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு கஷ்டப்பட்டு படிக்க வைக்காரு. அதுக்கு நீ நல்லபடியா படிச்சு ஒரு பெரிய வேலைக்கு போனினா தான் அவர் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு மரியாதை. அவருக்காகவாது படிக்கனும்”னு. அவனும் “சரி”ம்பான். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான்.. ஏனோ இப்படியாகி... இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யார் நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்று கண்ணாடி சார் சொன்னத நான் மட்டும் உயிரோட இருக்கும் போது கேட்டிருந்தேன்னா மனசு தூக்கி வாரி போட்டிருக்கும்.
“டேய்.. உங்கப்பா வீடு வீடா போய் லெட்டர் குடுத்தா.. நீ ஊர்ல இருக்கிற பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் போய் குடுக்கிறியா.. அதுவும் லவ் லெட்டரு.. அப்பன் புத்தி அப்படியே இருக்கு”னு திட்டிட்டு எப்படி மாத்தி பேசுறாரு பாத்தீங்களா.. அப்பவும் கூட நான் ஊர்ல இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாமா குடுத்தேன். லட்சுமிக்கு மட்டும் தான குடுத்தேன். ஓ.. உங்களுக்கு லட்சுமி யாருனு தெரியாதுல்ல..
லட்சுமி பதினொன்னாம் வகுப்புல எங்க ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தா.. என் கிளாஸ் தான். பாக்குறதுக்கு காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருப்பா. அவ கண்ணை சுருக்கி சிரிக்கிறத பாக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்டேட் பஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள என்னமோ மாதிரி. அத எப்படி சொல்றது... ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும்.. பென்சில் சீவ ப்ளேடு குடுத்த்துல ஆரம்பிச்ச எங்க ப்ரெண்ட்சிப்பு கடைசியல எனக்குள்ள லவ்வாயிருச்சு.. சினிமா டயலாக் மாதிரியே இருக்குல.. ஆனா இத எனக்கு எப்படி சொல்லனு தெரியல..
ஒரு தடவை அவளோட ரெக்காட்டு நோட்டுல இதயம் படம் வரைஞ்சு தரச்சொன்னா.. நானும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு கூடவே ஒரு சின்னத் தாள்ல கவிதைனு சொல்லி ஒரு ஆறு வரி எழுதிக்கொடுத்தேன். அந்த கவிதைய அவ பாக்காம நோட்ட அப்படியே சார்ட்ட நீட்ட... அவர் அதை எடுத்து, யார்க்கு யார் எழுதுனானு கேட்டு கூட்டத்த கூட்டிட்டாரு. எல்லாரும் அவளை கூட்டமா கூடி விசாரிச்சதுல, அவ அழுகுறா.. அது பொறுக்காம நான் தான் எழுதுனேன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவளுக்கு நாலு திட்டும் எனக்கு பிரம்படியும் கிடைச்சுது. அது பத்தாதுன்னு எங்க அப்பாவையும் வரச்சொல்லி அவர் வந்து வாத்தியார்ட்ட இருந்த பிரம்ப வாங்கி எல்லார் முன்னாலையும் வச்சு அடி அடினு அடிச்சு பெரம்பு உடைஞ்சதும் தான் எல்லார் மனசும் ஆறுச்சு. அந்த பிரம்ப நான் தான் அதுக்கு முந்தின நாள் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறம் லெட்சுமி என்கிட்ட பேசவே இல்ல. அவ மட்டுமில்ல எந்த பொண்ணும் என்கிட்ட பேசல. அவகிட்ட எத்தனையோ தடவை பேச போனாலும் ஒன்னு ‘உம்’முனு இருப்பா.. இல்ல அழ ஆரம்பிச்சுருவா.
அப்புறம் ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போது அவள என்கிட்ட பேச சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருந்த்தை எந்த புண்ணியவானோ பார்த்துட்டு போய் என் அப்பாட்ட வத்தி வைச்சுட்டான். அன்னிக்கு எங்கப்பாவுக்கு புதுசா பெல்ட் வாங்கவும், எனக்கு மருந்த வாங்கவுமா ரெட்டைச் செலவு. பிறகு ஒரு வழியா தேறி ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டு நாள் ஒழுங்கா இருந்த நான் மூனாவது நாள் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட போய் பேச சொல்லி கெஞ்சலா, கோவமா, அதிகாரமா, அமைதியானு மாத்தி, மாத்தி பேசுனதுல அவ. “என்னைய ஏன் இப்படி தொல்லை பண்ணுற.. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வீட்டுல எல்லாரும் என்னையத்தான் தப்பா பேசுறாங்க. படிப்பையே நிறுத்திறனும்னு சொன்னாங்க. உன்னால எனக்கு தினம் தினம் எவ்வளவு திட்டு விழுது தெரியுமா..? அப்ப எல்லாம் செத்துறலாம் போல இருக்கு. முன்ன உன்னைய பிடிச்சிருந்துச்சோ இல்லையோ.. இப்போ உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உண்மையிலேயே நல்லா இருக்கனும்னு நினைச்சீனா இனிமே என் முகத்துலையே முழிக்காத என்கிட்ட பெசாத.. ப்ளீஸ்”னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டா..
எனக்கு அப்போ என்ன தோணுச்சோ... கோவம் தலைக்கு ஏறிப்போச்சு. வேகமா பையில, புக்குக்குள்ள வச்சிரந்த பிளேட தேடிப் புடிச்சு எடுத்து, “நான் உயிரோட இருந்தாத்தான உன்கிட்ட பேசனும்னு சொல்வேன். உனக்கு தொல்லை கொடுப்பேன். நான் செத்தட்டா தோணாதுல.. நீயும் நிம்மதியா இருப்பீல”னு சொல்லிக்கிட்டே, என் கையில பிளேடால கீற ஆரம்பிச்சேன்.. ரத்தம் கொட்டுச்சு.. கண்ணெல்லாம் சொருகுச்சு.. அப்படியே செத்து போயிருவோம்னு தான் நினைச்சேன். முழிச்சு பார்த்தா கையில கட்டோட வீட்டுல இருக்கேன். அதுக்கப்புறம் கிட்டத் தட்ட ஒரு மாசமா ஸ்கூலுக்கே போகல. வேற ஸ்கூலுக்கு போறியானு கேட்டாங்க. முடியாதுனுட்டேன். தெருப் பையங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. ஆனா லட்சுமி ஞாபகம் அடிக்கடி வரும். கனவுல கூட அவதான் வருவா.. காயம் பட்ட இடத்துல முத்தம் கொடுப்பா.. நீ கிரிக்கெட்ல லாஸ்ட் ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சு பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வா நான் உன்னை கட்டிக்கறேம்பா.. நானும் ஓங்கி, ஓங்கி அடிப்பேன். ஆனா பந்து போகாம பக்கத்துலயே விழும். அம்பயர் எங்க வீட்டு மாட்ட பத்திக்கிட்டே கிரௌண்டுக்கு வந்து அவுட் கொடுப்பாரு. எதிர் டீம் ஜெயிச்சதும் எல்லாரும் எங்க மாட்டுல பால் கறந்து குடிப்பாங்க. இப்படி கண்ணாபின்னான கனவு வரும். இன்னொரு விஷயம் எங்க வீட்டு மாடு.. காளை மாடு. அப்புறம்.. ரெண்டு பேரும் கைகோர்த்து நடந்து போற மாதிரி கனவு வரும். டி.வி பார்க்கும் போது கூட அவதான் வருவா.. நியூஸ் வாசிப்பா, சொல்லப் போனா எங்க பார்த்தாலும் அவதான் தெரிஞ்சா.
ஒருநாள் என்னோட பைக்கட்ட எதுக்கோ எடுத்து துழாவுனப்போ நான் என் நோட்டுக்குள்ள வச்சிருந்த அவளோட காஞ்ச ரோஜாப்பூ, என் பேரு எழுதிக் கொடுத்த நோட்டு, அவ தின்னுட்டு அதுல பொம்மை செஞ்சு தந்த சாக்லேட் தாள். அவ ஓரம் கடிச்ச பேனா மூடி.. இதெல்லாம் பார்க்க.. பார்க்க.. எனக்க அழுகையா வந்துச்சு.. ஏதாவது செய்யனும் போல இருந்துச்சு.
அப்போதான் பரண் மேல தங்கராசு மாமா வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்து கண்ணுல பட்டுச்சு. எடுத்து ஒரே மடக்குல காலி பண்ணிட்டேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் உள்ள வந்த அம்மா பார்த்துட்டு கத்தி, ஊர் கூடி.. என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாங்க.. போற வழியில லட்சமியோட முகம் பெரிசா.. தியேட்டர்ல நடிகரோட முகத்தை க்ளோசப்ல காட்டும் போது முத சீட்டுல உட்கார்ந்து பார்த்தா தெரியுமே.. அந்த மாதிரி தெரிஞ்சுது. கண்ணு முழுக்க அவதான் தெரிஞ்சா. அப்புறம் ஒரே இருட்டு. டாக்டர் பார்த்துட்டு எல்லா படத்துலையும் சொல்ற மாதிரி “ஒரு கால்மணி நேரம் முன்னவாச்சும் கொண்டுவந்திருக்கனும்... ம்கூம்..“னு சொல்லிட்டாரு.
என்னைய சுத்தி இப்படி உட்கார்ந்துகிட்டு இப்படி ஒப்பாரி வச்சு அழறது எனக்கு எரிச்சலா இருக்கு. நான் செத்துட்டதுல இவங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. நான் உயிரா நினைச்ச லட்சுமியே என்னைய பிடிக்கலனு சொல்லிட்டு போனதுக்கப்புறம் நான் யாருக்காக இருக்கனும்? அதுவும் போக நான் செத்த்துல இவங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது.. என்ன எங்க கிரிக்கெட் டீம்ல எனக்கு பதில் கட்டை பாஸ்கர் விளையாடுவான். க்ளாஸ்ல என் இடத்துல அநேகமா மைதீன் உட்காருவான். அவனுக்கும் லட்சுமி மேல ஒரு கண்ணு. தேவியக்காவுக்கு கடைக்கு போக எனக்கு பதில் எதிர் வீட்டு முருகன் இருக்கான். அப்பாவுக்கு என்னால எந்த தொல்லையும் இல்ல. அம்மா இனிமேலாவது என்னைய பத்தி கவலைப்படாம சுடுசோறு சாப்பிடுவா. லட்சமிய கூட அவ வீட்டுல திட்ட மாட்டாங்க. என்ன நான் இருந்திருந்தா அவள கல்யாணம் பண்ணியிருந்தா அவள ரொம்ப நல்லபடியா பாத்திட்டிருந்திருப்பேன். வேறயாருக்கும் அவள நல்லா பாத்துக்க தெரியாது. அவதான் புரிஞ்சுக்கல.. ம்...நாளைக்கு பேப்பர்ல போட்டாலும் போடுவாங்க..‘காதல் தோல்வி.. மாணவர் தற்கொலை’னு போட்டு ரெண்டு பத்தி எழுதியிருப்பாங்க. போட்டோ கூட போடுறாங்களோ என்னவோ.. அப்படி போட்டா ஹால்டிக்கட்டுக்கு எடுத்த போட்டாவ போட்டா நல்லா இருக்கும். அதுல நான் அழகா இருப்பேன். பேப்பர படிக்கிறவன் கொஞ்ச நேரத்துல மறந்துடுவான். பள்ளிக்கூடத்துல கொஞ்சநாள் ஞாபகம் வச்சிருப்பாங்க. வீட்டுல ஒன்னு, ரெண்டு மாசம் நினைச்சிட்டு அப்புறம் அவங்கவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. அவ்வளவு தான்.
இன்னும் என் உடம்ப பார்க்க ஆட்கள் வந்துகிட்டேதான் இருக்குறாங்க. உள் ரூமோட வாசல் கதவுக்கு பக்கத்துல ஏதோ தெரிஞ்ச முகமா பட, யார்னு பார்த்தேன். என் முன் பெஞ்சுல இருக்கிற புவனா.. அப்போ கண்டிப்பா மூர்த்தியும் வந்திருப்பானேனு தேடினேன். பக்கத்துலயே நின்னுட்டிருந்தான். அடுத்து இவன் தான். லேசாய் சிரித்துக் கொண்டேன். உதயராஜ், மோகன், கட்டை பாஸ்கர், லட்சு...மி. அட, லட்சுமி கூட வந்திருக்கா போல.. ஆமா இவ எதுக்கு இங்க வரனும், அதான் பிடிக்கலனு சொல்லிட்டால.. அப்புறம்
ஏன் வந்தா..? ஒருவேளை நான் செத்தது உண்மையானு பார்க்க வந்திருப்பாளோ..? பார்த்தா அப்படி தெரியல. கண்ணுல கண்ணீரா வந்துட்டே இருந்துச்சு.. ஒரு வேளை சாவு வீட்டுக்கு வந்தா அழனும்னு சாஸ்திரத்துக்கு அழறாளோ? ஆனா முகத்தை பார்த்தா இப்போ அழ ஆரம்பிச்சது போல தெரியல.. ரொம்ப நேரமா அழுதழுது முகம் செவக்குற வரைக்கு அழுதுருக்கா.. இன்னமும் கூட ஏங்கி.. ஏங்கி அழுதுட்டே இருக்கா.. ஏன்..? ஏன்..?
அதுக்குள்ள என் உடம்ப தூக்கி பாடையில வைச்சு தூக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. எல்லாரோட அழுகையும் அதிகமாச்சு. எல்லாமே எனக்கு செயற்கையா பட்டுச்சு.. அவளும் அம்மாவும் அழுத்து தவிர. அவ வாய் விட்டே அழ ஆரம்பிச்சுட்டா.. மெது.. மெதுவா என்னைய வீட்டக்குள்ள இருந்து வெளிய எடுத்து வந்து ரோட்டுக்கு கொண்டு போக ஆரம்பிச்சாங்க. நாலு பேர் சேர்ந்து பாடைய உசத்தி தோளுக்கு மேல தூக்குனதுல என்னால கீழ பார்க்க முடியல. அவ கூடவே கொஞ்ச தூரம் நடந்து வந்தா.. அவ அழுகைச் சத்தம் எனக்கு கேட்டுகிட்டே வந்தது.. “ஏன் அழுற... அழாத”னு நான் சொல்லிப் பாக்குறேன் அவ காதுல விழவே மாட்டேன்குது. அவ கொஞ்சதூரம் வந்த்தும் மயக்கமாகி விழுறானு கூட இருக்கிறவங்க போடுற சத்தத்துல தெரியுது. ‘கீழ எதுவும் விழுந்துட்டாளா.. அதுக்குள்ள யாராவது புடிச்சுட்டாங்களானு நான் பாக்குறதுக்குள்ள தெருமுனை வந்துருச்சு.. நாங்க வளைஞ்சுட்டோம்.
“லட்சுமி.. லட்சுமி...”
.
என்னைய சுத்தி உட்கார்ந்துகிட்டு இந்த பொம்பளைங்க ஏன்தான் இப்படி அழுதுட்டு இருக்காங்களோ தெரியல. அதுலையும் நாலாவது வீட்டுல இருக்கிற கிழவி ஒப்பாரின்ற பேர்ல காது பக்கத்துல வந்து கத்துற கத்து இருக்கே.. நல்லவேளை நான் உயிரோட இல்ல. இல்லைன்னா இந்நேரம் என் காது கிழிஞ்சிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னால நான் தெருவுல கிரிக்கெட் விளையாண்டப்போ ‘லெக்’ சைடுல நான் அடிச்ச பந்து நேரா போயி இவ ‘லெக்’ல பட்டிருச்சு. அதுக்கு என்னலாம் திட்டுனா, எப்படியெல்லாம் சண்டை போட்டா.. இப்ப என்னனா.. “ரெண்டு நாளைக்கு முன்ன கூட சிரிச்சு, சிரிச்சு பேசுனானே”னு வாய் கூசாம பொய் சொல்றாளே... ‘ஒப்பாரி வைக்கும் போது கூட உண்மை பேச மாட்டாங்க போல. செத்தவன் எந்திரிச்சு வந்து சொல்ல மாட்டான்ற தைரியம்.’
என் கால்மாட்டுல உட்காந்து அழுதழுது முகம் சிவந்து, வீங்கிப் போயிருந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்குது. என் மேல அவளுக்கு ரொம்ப பிரியம். நான் எது கேட்டாலும் வாங்கித்தருவா. நேத்து நைட்டுல இருந்து அம்மா பட்டினி. இன்னிக்கு காலையிலேயும் எதுவுமே சாப்பிடல. அவ பாதிநாள் இப்படித்தான் இருக்கா...
எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா ஏதோ பேருக்கு சாப்பிடுவா.. நானும் அப்பாவும் இட்லி, தோசைனு சாப்பிட, அவளுக்கு எங்கயிருந்துதான் கிடைக்குமோ பாழாப் போன பழைய சோறு. “எம்மா.. தோசைக்கு கூட கொஞ்சம் போட்டு அரைக்கலாம்ல”னு கேட்டா, “மிஞ்சிப் போனா உங்க அப்பாகிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது.. அதுவும் போக இவ்வளவு சோத்தையும் தூரவா கொட்டுறது”னு எதிர் கேள்வி கேட்பா. “சரி எனக்கு வை”னு சொன்னா, “ம்கூம்.. வளர்ற பிள்ளை சூடா சாப்பிடனும்”னு மழுப்பிடுவா. இப்போ கூட பாருங்க தேவியக்கா கொடுக்கிற காபிய குடிக்கமாட்டேங்குறா. “அட.. அம்மா அதையாது குடிச்சுத் தொலையேன்.”
அப்பா, வெளிய பெஞ்சில ஒக்காந்திருக்கார். அவர் கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த்து. ஆனா அது அழுத்துனால வந்த்தில்லனு எனக்குத் தெரியும். பெரிய மாமா தங்கராசு தான் பாடைக்கு சொல்லுறது, மேளத்துக்கு சொல்லுறதுன்னு எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்காரு.
வாசப்பக்கம் இருந்த செம்பருத்தி செடிக்கிட்ட வச்சு ஒருத்தரு பாடை கட்டிக்கிட்டு இருக்காரு. அதுல மூனாவது குறுக்கு கம்பை சரியா கட்டாம விட்டுட்டாரு. பாடை கட்டுற மும்மூரத்துல அணைக்காம அவர் தூக்கி எறிஞ்ச பீடிய தங்கராசு மாமாவோட மக கலையரசி கவனிக்காம மிதிச்சுட்டு ‘ஸ்...ஸ்..’னு காலை தூக்கிகிட்டே நொண்டி, நொண்டி நடக்கா.. பாவமா இருக்கு.. இவளும் நானும் சின்ன வயசுல ஒரு தடவை ‘பருப்பு கடைஞ்சு’ விளையாடும் போது, ஒவ்வொரு விரலையும் சோறு, குழம்பு, கூட்டு, அப்பளம்னு சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம். சாப்ட்ட பிறகு ‘நண்டு வருது, நரி வருது’னு அவ இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிவிடும் போது அவ பாவாடை அவுந்து விழ.. அவ ‘ஓ’னு அழ.. அவ அழுவுறத பாத்து நானும் அழ... ஒரே சிரிப்பு தான்...
அட, கண்ணாடி சார் கூட என்னை பார்க்க வந்திருக்கார் போல.. அவர் எனக்கு கணக்கு பாடம் எடுக்கிறாரு. ‘கண்ணாடி சார்னு அவருக்கு பேர் வர ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு அவர் கண்ணாடி போட்டிருப்பாரு. இன்னொன்னு.. அவர் எப்ப பாத்தாலும் சட்டை பைக்குள்ள வச்சிருக்கிற சின்ன கண்ணாடி எடுத்து பார்த்து அடிக்கடி தலைய சீவிக்கிட்டே இருப்பாரு. இவரு எத்தனையோ தடவ என்னை முட்டி போட வச்சு கைய தூக்கச் சொல்லிட்டு பின்னாலயே அடிச்சிருக்காரு. அத நினைச்சு பார்த்தா இப்போ கூட லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. கூடவே தமிழய்யாவும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் அப்பாட்ட ஏதோ பேசுறாங்க..
“நல்ல பையன் சார். நல்லா படிப்பான். நான் அவன ஸ்கூல் பஸ்ட் வருவான்னு எதிர்பாத்தேன். படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும் அவன் தான் முதல்ல நிப்பான். நான் கூட சொல்லுவேன்.. “டேய்.. உங்கப்பா ஒரு போஸ்ட்மேனா இருந்து வெயில், மழைனு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு கஷ்டப்பட்டு படிக்க வைக்காரு. அதுக்கு நீ நல்லபடியா படிச்சு ஒரு பெரிய வேலைக்கு போனினா தான் அவர் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு மரியாதை. அவருக்காகவாது படிக்கனும்”னு. அவனும் “சரி”ம்பான். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான்.. ஏனோ இப்படியாகி... இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யார் நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்று கண்ணாடி சார் சொன்னத நான் மட்டும் உயிரோட இருக்கும் போது கேட்டிருந்தேன்னா மனசு தூக்கி வாரி போட்டிருக்கும்.
“டேய்.. உங்கப்பா வீடு வீடா போய் லெட்டர் குடுத்தா.. நீ ஊர்ல இருக்கிற பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் போய் குடுக்கிறியா.. அதுவும் லவ் லெட்டரு.. அப்பன் புத்தி அப்படியே இருக்கு”னு திட்டிட்டு எப்படி மாத்தி பேசுறாரு பாத்தீங்களா.. அப்பவும் கூட நான் ஊர்ல இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாமா குடுத்தேன். லட்சுமிக்கு மட்டும் தான குடுத்தேன். ஓ.. உங்களுக்கு லட்சுமி யாருனு தெரியாதுல்ல..
லட்சுமி பதினொன்னாம் வகுப்புல எங்க ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தா.. என் கிளாஸ் தான். பாக்குறதுக்கு காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருப்பா. அவ கண்ணை சுருக்கி சிரிக்கிறத பாக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்டேட் பஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள என்னமோ மாதிரி. அத எப்படி சொல்றது... ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும்.. பென்சில் சீவ ப்ளேடு குடுத்த்துல ஆரம்பிச்ச எங்க ப்ரெண்ட்சிப்பு கடைசியல எனக்குள்ள லவ்வாயிருச்சு.. சினிமா டயலாக் மாதிரியே இருக்குல.. ஆனா இத எனக்கு எப்படி சொல்லனு தெரியல..
ஒரு தடவை அவளோட ரெக்காட்டு நோட்டுல இதயம் படம் வரைஞ்சு தரச்சொன்னா.. நானும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு கூடவே ஒரு சின்னத் தாள்ல கவிதைனு சொல்லி ஒரு ஆறு வரி எழுதிக்கொடுத்தேன். அந்த கவிதைய அவ பாக்காம நோட்ட அப்படியே சார்ட்ட நீட்ட... அவர் அதை எடுத்து, யார்க்கு யார் எழுதுனானு கேட்டு கூட்டத்த கூட்டிட்டாரு. எல்லாரும் அவளை கூட்டமா கூடி விசாரிச்சதுல, அவ அழுகுறா.. அது பொறுக்காம நான் தான் எழுதுனேன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவளுக்கு நாலு திட்டும் எனக்கு பிரம்படியும் கிடைச்சுது. அது பத்தாதுன்னு எங்க அப்பாவையும் வரச்சொல்லி அவர் வந்து வாத்தியார்ட்ட இருந்த பிரம்ப வாங்கி எல்லார் முன்னாலையும் வச்சு அடி அடினு அடிச்சு பெரம்பு உடைஞ்சதும் தான் எல்லார் மனசும் ஆறுச்சு. அந்த பிரம்ப நான் தான் அதுக்கு முந்தின நாள் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறம் லெட்சுமி என்கிட்ட பேசவே இல்ல. அவ மட்டுமில்ல எந்த பொண்ணும் என்கிட்ட பேசல. அவகிட்ட எத்தனையோ தடவை பேச போனாலும் ஒன்னு ‘உம்’முனு இருப்பா.. இல்ல அழ ஆரம்பிச்சுருவா.
அப்புறம் ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போது அவள என்கிட்ட பேச சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருந்த்தை எந்த புண்ணியவானோ பார்த்துட்டு போய் என் அப்பாட்ட வத்தி வைச்சுட்டான். அன்னிக்கு எங்கப்பாவுக்கு புதுசா பெல்ட் வாங்கவும், எனக்கு மருந்த வாங்கவுமா ரெட்டைச் செலவு. பிறகு ஒரு வழியா தேறி ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டு நாள் ஒழுங்கா இருந்த நான் மூனாவது நாள் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட போய் பேச சொல்லி கெஞ்சலா, கோவமா, அதிகாரமா, அமைதியானு மாத்தி, மாத்தி பேசுனதுல அவ. “என்னைய ஏன் இப்படி தொல்லை பண்ணுற.. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வீட்டுல எல்லாரும் என்னையத்தான் தப்பா பேசுறாங்க. படிப்பையே நிறுத்திறனும்னு சொன்னாங்க. உன்னால எனக்கு தினம் தினம் எவ்வளவு திட்டு விழுது தெரியுமா..? அப்ப எல்லாம் செத்துறலாம் போல இருக்கு. முன்ன உன்னைய பிடிச்சிருந்துச்சோ இல்லையோ.. இப்போ உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உண்மையிலேயே நல்லா இருக்கனும்னு நினைச்சீனா இனிமே என் முகத்துலையே முழிக்காத என்கிட்ட பெசாத.. ப்ளீஸ்”னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டா..
எனக்கு அப்போ என்ன தோணுச்சோ... கோவம் தலைக்கு ஏறிப்போச்சு. வேகமா பையில, புக்குக்குள்ள வச்சிரந்த பிளேட தேடிப் புடிச்சு எடுத்து, “நான் உயிரோட இருந்தாத்தான உன்கிட்ட பேசனும்னு சொல்வேன். உனக்கு தொல்லை கொடுப்பேன். நான் செத்தட்டா தோணாதுல.. நீயும் நிம்மதியா இருப்பீல”னு சொல்லிக்கிட்டே, என் கையில பிளேடால கீற ஆரம்பிச்சேன்.. ரத்தம் கொட்டுச்சு.. கண்ணெல்லாம் சொருகுச்சு.. அப்படியே செத்து போயிருவோம்னு தான் நினைச்சேன். முழிச்சு பார்த்தா கையில கட்டோட வீட்டுல இருக்கேன். அதுக்கப்புறம் கிட்டத் தட்ட ஒரு மாசமா ஸ்கூலுக்கே போகல. வேற ஸ்கூலுக்கு போறியானு கேட்டாங்க. முடியாதுனுட்டேன். தெருப் பையங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. ஆனா லட்சுமி ஞாபகம் அடிக்கடி வரும். கனவுல கூட அவதான் வருவா.. காயம் பட்ட இடத்துல முத்தம் கொடுப்பா.. நீ கிரிக்கெட்ல லாஸ்ட் ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சு பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வா நான் உன்னை கட்டிக்கறேம்பா.. நானும் ஓங்கி, ஓங்கி அடிப்பேன். ஆனா பந்து போகாம பக்கத்துலயே விழும். அம்பயர் எங்க வீட்டு மாட்ட பத்திக்கிட்டே கிரௌண்டுக்கு வந்து அவுட் கொடுப்பாரு. எதிர் டீம் ஜெயிச்சதும் எல்லாரும் எங்க மாட்டுல பால் கறந்து குடிப்பாங்க. இப்படி கண்ணாபின்னான கனவு வரும். இன்னொரு விஷயம் எங்க வீட்டு மாடு.. காளை மாடு. அப்புறம்.. ரெண்டு பேரும் கைகோர்த்து நடந்து போற மாதிரி கனவு வரும். டி.வி பார்க்கும் போது கூட அவதான் வருவா.. நியூஸ் வாசிப்பா, சொல்லப் போனா எங்க பார்த்தாலும் அவதான் தெரிஞ்சா.
ஒருநாள் என்னோட பைக்கட்ட எதுக்கோ எடுத்து துழாவுனப்போ நான் என் நோட்டுக்குள்ள வச்சிருந்த அவளோட காஞ்ச ரோஜாப்பூ, என் பேரு எழுதிக் கொடுத்த நோட்டு, அவ தின்னுட்டு அதுல பொம்மை செஞ்சு தந்த சாக்லேட் தாள். அவ ஓரம் கடிச்ச பேனா மூடி.. இதெல்லாம் பார்க்க.. பார்க்க.. எனக்க அழுகையா வந்துச்சு.. ஏதாவது செய்யனும் போல இருந்துச்சு.
அப்போதான் பரண் மேல தங்கராசு மாமா வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்து கண்ணுல பட்டுச்சு. எடுத்து ஒரே மடக்குல காலி பண்ணிட்டேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் உள்ள வந்த அம்மா பார்த்துட்டு கத்தி, ஊர் கூடி.. என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாங்க.. போற வழியில லட்சமியோட முகம் பெரிசா.. தியேட்டர்ல நடிகரோட முகத்தை க்ளோசப்ல காட்டும் போது முத சீட்டுல உட்கார்ந்து பார்த்தா தெரியுமே.. அந்த மாதிரி தெரிஞ்சுது. கண்ணு முழுக்க அவதான் தெரிஞ்சா. அப்புறம் ஒரே இருட்டு. டாக்டர் பார்த்துட்டு எல்லா படத்துலையும் சொல்ற மாதிரி “ஒரு கால்மணி நேரம் முன்னவாச்சும் கொண்டுவந்திருக்கனும்... ம்கூம்..“னு சொல்லிட்டாரு.
என்னைய சுத்தி இப்படி உட்கார்ந்துகிட்டு இப்படி ஒப்பாரி வச்சு அழறது எனக்கு எரிச்சலா இருக்கு. நான் செத்துட்டதுல இவங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. நான் உயிரா நினைச்ச லட்சுமியே என்னைய பிடிக்கலனு சொல்லிட்டு போனதுக்கப்புறம் நான் யாருக்காக இருக்கனும்? அதுவும் போக நான் செத்த்துல இவங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது.. என்ன எங்க கிரிக்கெட் டீம்ல எனக்கு பதில் கட்டை பாஸ்கர் விளையாடுவான். க்ளாஸ்ல என் இடத்துல அநேகமா மைதீன் உட்காருவான். அவனுக்கும் லட்சுமி மேல ஒரு கண்ணு. தேவியக்காவுக்கு கடைக்கு போக எனக்கு பதில் எதிர் வீட்டு முருகன் இருக்கான். அப்பாவுக்கு என்னால எந்த தொல்லையும் இல்ல. அம்மா இனிமேலாவது என்னைய பத்தி கவலைப்படாம சுடுசோறு சாப்பிடுவா. லட்சமிய கூட அவ வீட்டுல திட்ட மாட்டாங்க. என்ன நான் இருந்திருந்தா அவள கல்யாணம் பண்ணியிருந்தா அவள ரொம்ப நல்லபடியா பாத்திட்டிருந்திருப்பேன். வேறயாருக்கும் அவள நல்லா பாத்துக்க தெரியாது. அவதான் புரிஞ்சுக்கல.. ம்...நாளைக்கு பேப்பர்ல போட்டாலும் போடுவாங்க..‘காதல் தோல்வி.. மாணவர் தற்கொலை’னு போட்டு ரெண்டு பத்தி எழுதியிருப்பாங்க. போட்டோ கூட போடுறாங்களோ என்னவோ.. அப்படி போட்டா ஹால்டிக்கட்டுக்கு எடுத்த போட்டாவ போட்டா நல்லா இருக்கும். அதுல நான் அழகா இருப்பேன். பேப்பர படிக்கிறவன் கொஞ்ச நேரத்துல மறந்துடுவான். பள்ளிக்கூடத்துல கொஞ்சநாள் ஞாபகம் வச்சிருப்பாங்க. வீட்டுல ஒன்னு, ரெண்டு மாசம் நினைச்சிட்டு அப்புறம் அவங்கவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. அவ்வளவு தான்.
இன்னும் என் உடம்ப பார்க்க ஆட்கள் வந்துகிட்டேதான் இருக்குறாங்க. உள் ரூமோட வாசல் கதவுக்கு பக்கத்துல ஏதோ தெரிஞ்ச முகமா பட, யார்னு பார்த்தேன். என் முன் பெஞ்சுல இருக்கிற புவனா.. அப்போ கண்டிப்பா மூர்த்தியும் வந்திருப்பானேனு தேடினேன். பக்கத்துலயே நின்னுட்டிருந்தான். அடுத்து இவன் தான். லேசாய் சிரித்துக் கொண்டேன். உதயராஜ், மோகன், கட்டை பாஸ்கர், லட்சு...மி. அட, லட்சுமி கூட வந்திருக்கா போல.. ஆமா இவ எதுக்கு இங்க வரனும், அதான் பிடிக்கலனு சொல்லிட்டால.. அப்புறம்
ஏன் வந்தா..? ஒருவேளை நான் செத்தது உண்மையானு பார்க்க வந்திருப்பாளோ..? பார்த்தா அப்படி தெரியல. கண்ணுல கண்ணீரா வந்துட்டே இருந்துச்சு.. ஒரு வேளை சாவு வீட்டுக்கு வந்தா அழனும்னு சாஸ்திரத்துக்கு அழறாளோ? ஆனா முகத்தை பார்த்தா இப்போ அழ ஆரம்பிச்சது போல தெரியல.. ரொம்ப நேரமா அழுதழுது முகம் செவக்குற வரைக்கு அழுதுருக்கா.. இன்னமும் கூட ஏங்கி.. ஏங்கி அழுதுட்டே இருக்கா.. ஏன்..? ஏன்..?
அதுக்குள்ள என் உடம்ப தூக்கி பாடையில வைச்சு தூக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. எல்லாரோட அழுகையும் அதிகமாச்சு. எல்லாமே எனக்கு செயற்கையா பட்டுச்சு.. அவளும் அம்மாவும் அழுத்து தவிர. அவ வாய் விட்டே அழ ஆரம்பிச்சுட்டா.. மெது.. மெதுவா என்னைய வீட்டக்குள்ள இருந்து வெளிய எடுத்து வந்து ரோட்டுக்கு கொண்டு போக ஆரம்பிச்சாங்க. நாலு பேர் சேர்ந்து பாடைய உசத்தி தோளுக்கு மேல தூக்குனதுல என்னால கீழ பார்க்க முடியல. அவ கூடவே கொஞ்ச தூரம் நடந்து வந்தா.. அவ அழுகைச் சத்தம் எனக்கு கேட்டுகிட்டே வந்தது.. “ஏன் அழுற... அழாத”னு நான் சொல்லிப் பாக்குறேன் அவ காதுல விழவே மாட்டேன்குது. அவ கொஞ்சதூரம் வந்த்தும் மயக்கமாகி விழுறானு கூட இருக்கிறவங்க போடுற சத்தத்துல தெரியுது. ‘கீழ எதுவும் விழுந்துட்டாளா.. அதுக்குள்ள யாராவது புடிச்சுட்டாங்களானு நான் பாக்குறதுக்குள்ள தெருமுனை வந்துருச்சு.. நாங்க வளைஞ்சுட்டோம்.
“லட்சுமி.. லட்சுமி...”
.
Thursday, July 29, 2010
கான்செப்ட் (சிறுகதை)
புத்திசாலிகளுக்கு.. நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை ‘பெண்’ணாகத் தான் பிறக்கும்.
கேட்பதற்கு கொஞ்சம் மடத்தனமாக தோன்றினாலும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உண்மை என்று தெரியும். புதுமையை விரும்புபவர்களுக்கு, நல்ல கிரியேட்டருக்கு, ஓப்பன் டைப்பான ஆட்களுக்கு, கொஞ்சம் அந்த மாதிரி விஷயங்களில்(லும்) ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் முதல் குழந்தை பெண்ணாகத் தான் இருக்கும். நான் ஆண்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த எண்ணம் எனக்கு எப்படி தோன்றியதென்று ஞாபகம் இல்லை. எப்போது என்றும் ஞாபகமில்லை. ஆனால் சரி என்றே தோன்றுகிறது. இப்படி யோசிக்கும் போது அதற்கு ஆதாரமாய் கமல்ஹாசன், பாரதியார், என்.எஸ்.கிருஷ்ணன், கவிஞர் ஷெல்லி, கார்ட்டூனிஸ்ட் மதன், துரை சார் இப்படி நிறைய பேர்கள் வந்து போவார்கள்.. இவர்கள் அனைவரும் மேலே உள்ள ஏதேனும் ஒரு கேட்டகிரியில் அல்லது எல்லாவற்றிலுமே அடங்குவார்கள்... துரை.. நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் எனக்கு ‘ஹெட்’டாய் இருந்தவர்.
இந்த வரிசையில் வந்திருக்க வேண்டியவர் தான் சுகுமார் சாரும்... ஆனால் வரவில்லை. சுகுமார் சாருக்கு வயது 55 இருக்கும். ஒரே ஒரு மகன்.. பிரதாப். அவன் என்னைவிட 4 வயது சிறியவன். சுகுமார் சாரும் நானும் வயது வித்தியாசம் இன்றி பழகுவோம். அதிலும் பெண்களை பற்றி பேசும் போதெல்லாம்.. தன் வயதையும் மறந்து பேசுவார்...
“சார்.. எனக்கு பொம்பளப்பிள்ளை தான் பிறக்கும்...”
“எப்படி சொல்ற..?”
“புத்திசாலிங்களுக்கு எல்லாம் பொன்னுதான் சார் பிறக்கும்...?”
முதன் முதலில் இதை அவரிடம் நான் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தார்.
“நான் பார்த்தவரை நிறைய பேருக்கு அப்படி தான் பிறந்திருக்கு...”
“அப்போ ஆம்பளை பிள்ளை பிறந்தவங்கள எல்லாம் புத்திசாலி இல்லைன்றியா... அந்த வகையில பார்த்தா.. நீ ரைட்டர் சுஜாதாவ ரொம்ப புத்திசாலிம்ப... நீ சொல்ற கேரக்டர்ல நிறைய அவருக்கும் ஒத்து போகுது.. இன்னும் வைரமுத்து, ஐன்ஸ்டைன்...”
“அதான் எனக்கும் டவுட்டா இருக்கு.. இவரை மாதிரி ஒரு சில ஆட்கள் இடையில நின்னுட்டு என் கண்டுபிடிப்ப ப்ரூப் பண்ண விடமாட்டுறாங்க.. உங்களையும் சேர்த்து.. ஆனா என் கண்டுபிடிப்புல எந்த குறையும் இல்ல...”
“நீ அடிமுட்டாள்னு சொல்லுவியே.. ஜீவா.. அவன் அழகா ரெண்டு பொம்பளை பிள்ளைகள பெத்து வச்சிருக்கான்.. அப்படி பார்த்தா உன் கான்செப்ட்டே தப்பாகுதே..”
“போங்க சார்.. ரொம்ப குழப்புறீங்க.. நீங்க சொல்றத வச்சு பார்த்த அவன புத்திசாலினு நான் ஒத்துக்கனும்னு சொல்வீங்க போல.. நீங்க என்ன வேணா சொல்லுங்க.. என் கான்செப்ட் சரினு மட்டும் உள்மனசு சொல்லுது. என்னைக்காவது அதுக்கு ஒரு விடை கிடைக்கும்..”
“கண்டிப்பா கிடைக்கும்... வெயிட் பண்ணு.. விடாம திங்க் பண்ணு.. சமீபத்துல யாரும் பெருசா கண்டுபிடிச்ச மாதிரி தெரியல நீயாது அந்த குறைய தீர்த்து வை...”
“எனக்கு பிறக்க போற பொன்னுக்கு நான் பேர் கூட யோசிச்சுட்டேன்”
“என்ன?”
“வர்ஷா.. மழைனு அர்த்தம்...””“
“நல்லா இருக்கு”
“உங்களுக்கு பொன்னு பிறந்திருந்தா என்ன பேரு வச்சிருப்பீங்க?”
“நந்தினி”
“ஏன் சார்... உங்க பழைய லவ்வர் பேரா...”
“சே... சே.. அதெல்லாம் இல்ல.. அந்த பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்..“
அதிலிருந்து அவ்வப்போது இதைப் பற்றி பேச்சு வரும். நான் ஆர்க்யூ பண்ணுவதும் அவர் பதில் சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்த்து. எனக்கு மற்றவர்களைப் பற்றி கூட கவலையில்லை. ஆனால் இவருக்கு ஏன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறக்கவில்லை என்று தோன்றும்.. என்னால் எனது கான்செப்டையும் விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. இப்படி இருக்கையில் தான் ஒருநாள் காலையில் சுகுமார் சார் செத்து போய்விட்டார் என்ற செய்தி என் காதில் விழுந்தது.
ஒரு கணம் நான் இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதை ஒரு செய்தியாக கூட என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு அபத்தத்தை அந்த காலையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியானால் இன்று மாலை.. இனி வரும் எந்த மாலையிலும் நான் அவரை சந்திக்க முடியாது.. என் விவாத்திற்கு எதிர் குரல் வராது. என் அபத்தமான பேச்சுக்கு பதிலாய் அந்த சிரிப்பு ஒலி கேட்காது.. அவர் வீட்டிற்கு போகும் பொழுதெல்லாம், நான் காலிங்பெல்லை அழுத்தினால் ஒரு போதும் அவர் வந்து திறக்கப் போவதில்லை.. ஒரே சமயத்திலேயே அவர் அமரும் நாற்காலி, படுத்துறங்கும் கட்டில், நடமாடும் வீடு, என் பைக்கின் பின் இருக்கை, அவர் குரலை எதிரொலிக்கும் வீடு எல்லாம் காலியாகப் போகிறது...நினைத்துப் பார்க்கும் போது கழுத்தை யாரோ காற்றுபுகவிடாதபடி அழுத்தி பிடிப்பதைப் போல் இருந்தது. அவசரமாய் அவர் வீட்டிற்கு ஓடினேன்.
வீட்டு வாசலருகே படுக்க வைக்கப்பட்டிருந்தார்.. பட்டென எழுந்து ‘வாடா போய்.. ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்’ என்று சொல்வார் என்றே மனம் எதிர்பார்த்தது. இல்லை.. இனி சொல்லப் போவதில்லை.. அறிவு சொன்னாலும் கடைசி வரை மனம் கேட்கவே இல்லை.
எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்தவர்.நம் வாழ்நாளில் யாரை மறந்தாலும்.. நமக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியவரை மறக்க மாட்டோம். ஏனெனில் புத்தகங்களில் பல உலகங்கள் ஒளிந்திருக்கும்.. அதை நமக்கு காட்டியவர்கள் அவர்கள்.. புதிய உலகை அறிமுகம் செய்தவர்கள்.. நாம் மறக்க நினைத்தாலும் அந்த புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்...
ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.. அவருடன் பேசிய பொழுதுகள் எல்லாம் ஊமைப்படங்களாய் மனத்திரையில் ஒன்றின் மேல் ஒன்றாய் தெரிந்து கலந்தன...
உடலை கொண்டு போய் மயானத்தில் எரிக்கும் வரை உடன் இருந்து விட்டு வெறுமையாய் வீடு திரும்பினேன்.. வரும் வழியில் நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடும் டீக்கடையை கடக்கும் போது எனது அசட்டுத்தனமான கான்செப்ட் மனதில் வந்து போனது.. ‘புத்திசாலிங்களுக்கு, நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாத்தான் பிறக்கும்.’ அந்த வேளையிலும் ஒரு மெல்லிய சிரிப்பு எனது உதட்டில் தோன்றி மறைந்தது. அப்பொழுது என்னை நோக்கி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு அழகான பெண் வந்தாள்.. கெட்ட மனம்.. அப்போதும் அவளை ரசித்தது.. நேராக என்னிடம் வந்தவள்,
“கொண்டு போயிட்டாங்களா?” என்றாள். நிறைய அழுதிருந்தாள். புரிந்து கொண்டு..
“இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. நீங்க...? என்றேன்.
“நந்தினி. விழுப்புரத்துல இருந்து வர்றேன்” என்ற வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்ணீரோடு மயானத்தை நோக்கி ஓடினாள்...
.
கேட்பதற்கு கொஞ்சம் மடத்தனமாக தோன்றினாலும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உண்மை என்று தெரியும். புதுமையை விரும்புபவர்களுக்கு, நல்ல கிரியேட்டருக்கு, ஓப்பன் டைப்பான ஆட்களுக்கு, கொஞ்சம் அந்த மாதிரி விஷயங்களில்(லும்) ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் முதல் குழந்தை பெண்ணாகத் தான் இருக்கும். நான் ஆண்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த எண்ணம் எனக்கு எப்படி தோன்றியதென்று ஞாபகம் இல்லை. எப்போது என்றும் ஞாபகமில்லை. ஆனால் சரி என்றே தோன்றுகிறது. இப்படி யோசிக்கும் போது அதற்கு ஆதாரமாய் கமல்ஹாசன், பாரதியார், என்.எஸ்.கிருஷ்ணன், கவிஞர் ஷெல்லி, கார்ட்டூனிஸ்ட் மதன், துரை சார் இப்படி நிறைய பேர்கள் வந்து போவார்கள்.. இவர்கள் அனைவரும் மேலே உள்ள ஏதேனும் ஒரு கேட்டகிரியில் அல்லது எல்லாவற்றிலுமே அடங்குவார்கள்... துரை.. நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் எனக்கு ‘ஹெட்’டாய் இருந்தவர்.
இந்த வரிசையில் வந்திருக்க வேண்டியவர் தான் சுகுமார் சாரும்... ஆனால் வரவில்லை. சுகுமார் சாருக்கு வயது 55 இருக்கும். ஒரே ஒரு மகன்.. பிரதாப். அவன் என்னைவிட 4 வயது சிறியவன். சுகுமார் சாரும் நானும் வயது வித்தியாசம் இன்றி பழகுவோம். அதிலும் பெண்களை பற்றி பேசும் போதெல்லாம்.. தன் வயதையும் மறந்து பேசுவார்...
“சார்.. எனக்கு பொம்பளப்பிள்ளை தான் பிறக்கும்...”
“எப்படி சொல்ற..?”
“புத்திசாலிங்களுக்கு எல்லாம் பொன்னுதான் சார் பிறக்கும்...?”
முதன் முதலில் இதை அவரிடம் நான் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தார்.
“நான் பார்த்தவரை நிறைய பேருக்கு அப்படி தான் பிறந்திருக்கு...”
“அப்போ ஆம்பளை பிள்ளை பிறந்தவங்கள எல்லாம் புத்திசாலி இல்லைன்றியா... அந்த வகையில பார்த்தா.. நீ ரைட்டர் சுஜாதாவ ரொம்ப புத்திசாலிம்ப... நீ சொல்ற கேரக்டர்ல நிறைய அவருக்கும் ஒத்து போகுது.. இன்னும் வைரமுத்து, ஐன்ஸ்டைன்...”
“அதான் எனக்கும் டவுட்டா இருக்கு.. இவரை மாதிரி ஒரு சில ஆட்கள் இடையில நின்னுட்டு என் கண்டுபிடிப்ப ப்ரூப் பண்ண விடமாட்டுறாங்க.. உங்களையும் சேர்த்து.. ஆனா என் கண்டுபிடிப்புல எந்த குறையும் இல்ல...”
“நீ அடிமுட்டாள்னு சொல்லுவியே.. ஜீவா.. அவன் அழகா ரெண்டு பொம்பளை பிள்ளைகள பெத்து வச்சிருக்கான்.. அப்படி பார்த்தா உன் கான்செப்ட்டே தப்பாகுதே..”
“போங்க சார்.. ரொம்ப குழப்புறீங்க.. நீங்க சொல்றத வச்சு பார்த்த அவன புத்திசாலினு நான் ஒத்துக்கனும்னு சொல்வீங்க போல.. நீங்க என்ன வேணா சொல்லுங்க.. என் கான்செப்ட் சரினு மட்டும் உள்மனசு சொல்லுது. என்னைக்காவது அதுக்கு ஒரு விடை கிடைக்கும்..”
“கண்டிப்பா கிடைக்கும்... வெயிட் பண்ணு.. விடாம திங்க் பண்ணு.. சமீபத்துல யாரும் பெருசா கண்டுபிடிச்ச மாதிரி தெரியல நீயாது அந்த குறைய தீர்த்து வை...”
“எனக்கு பிறக்க போற பொன்னுக்கு நான் பேர் கூட யோசிச்சுட்டேன்”
“என்ன?”
“வர்ஷா.. மழைனு அர்த்தம்...””“
“நல்லா இருக்கு”
“உங்களுக்கு பொன்னு பிறந்திருந்தா என்ன பேரு வச்சிருப்பீங்க?”
“நந்தினி”
“ஏன் சார்... உங்க பழைய லவ்வர் பேரா...”
“சே... சே.. அதெல்லாம் இல்ல.. அந்த பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்..“
அதிலிருந்து அவ்வப்போது இதைப் பற்றி பேச்சு வரும். நான் ஆர்க்யூ பண்ணுவதும் அவர் பதில் சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்த்து. எனக்கு மற்றவர்களைப் பற்றி கூட கவலையில்லை. ஆனால் இவருக்கு ஏன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறக்கவில்லை என்று தோன்றும்.. என்னால் எனது கான்செப்டையும் விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. இப்படி இருக்கையில் தான் ஒருநாள் காலையில் சுகுமார் சார் செத்து போய்விட்டார் என்ற செய்தி என் காதில் விழுந்தது.
ஒரு கணம் நான் இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதை ஒரு செய்தியாக கூட என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு அபத்தத்தை அந்த காலையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியானால் இன்று மாலை.. இனி வரும் எந்த மாலையிலும் நான் அவரை சந்திக்க முடியாது.. என் விவாத்திற்கு எதிர் குரல் வராது. என் அபத்தமான பேச்சுக்கு பதிலாய் அந்த சிரிப்பு ஒலி கேட்காது.. அவர் வீட்டிற்கு போகும் பொழுதெல்லாம், நான் காலிங்பெல்லை அழுத்தினால் ஒரு போதும் அவர் வந்து திறக்கப் போவதில்லை.. ஒரே சமயத்திலேயே அவர் அமரும் நாற்காலி, படுத்துறங்கும் கட்டில், நடமாடும் வீடு, என் பைக்கின் பின் இருக்கை, அவர் குரலை எதிரொலிக்கும் வீடு எல்லாம் காலியாகப் போகிறது...நினைத்துப் பார்க்கும் போது கழுத்தை யாரோ காற்றுபுகவிடாதபடி அழுத்தி பிடிப்பதைப் போல் இருந்தது. அவசரமாய் அவர் வீட்டிற்கு ஓடினேன்.
வீட்டு வாசலருகே படுக்க வைக்கப்பட்டிருந்தார்.. பட்டென எழுந்து ‘வாடா போய்.. ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்’ என்று சொல்வார் என்றே மனம் எதிர்பார்த்தது. இல்லை.. இனி சொல்லப் போவதில்லை.. அறிவு சொன்னாலும் கடைசி வரை மனம் கேட்கவே இல்லை.
எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்தவர்.நம் வாழ்நாளில் யாரை மறந்தாலும்.. நமக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியவரை மறக்க மாட்டோம். ஏனெனில் புத்தகங்களில் பல உலகங்கள் ஒளிந்திருக்கும்.. அதை நமக்கு காட்டியவர்கள் அவர்கள்.. புதிய உலகை அறிமுகம் செய்தவர்கள்.. நாம் மறக்க நினைத்தாலும் அந்த புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்...
ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.. அவருடன் பேசிய பொழுதுகள் எல்லாம் ஊமைப்படங்களாய் மனத்திரையில் ஒன்றின் மேல் ஒன்றாய் தெரிந்து கலந்தன...
உடலை கொண்டு போய் மயானத்தில் எரிக்கும் வரை உடன் இருந்து விட்டு வெறுமையாய் வீடு திரும்பினேன்.. வரும் வழியில் நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடும் டீக்கடையை கடக்கும் போது எனது அசட்டுத்தனமான கான்செப்ட் மனதில் வந்து போனது.. ‘புத்திசாலிங்களுக்கு, நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாத்தான் பிறக்கும்.’ அந்த வேளையிலும் ஒரு மெல்லிய சிரிப்பு எனது உதட்டில் தோன்றி மறைந்தது. அப்பொழுது என்னை நோக்கி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு அழகான பெண் வந்தாள்.. கெட்ட மனம்.. அப்போதும் அவளை ரசித்தது.. நேராக என்னிடம் வந்தவள்,
“கொண்டு போயிட்டாங்களா?” என்றாள். நிறைய அழுதிருந்தாள். புரிந்து கொண்டு..
“இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. நீங்க...? என்றேன்.
“நந்தினி. விழுப்புரத்துல இருந்து வர்றேன்” என்ற வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்ணீரோடு மயானத்தை நோக்கி ஓடினாள்...
.
Friday, July 16, 2010
எச்சரிக்கை (சிறுகதை)
சமையலறையி்ல் ஏதோ உருளும் சத்தம் கேட்டது. அதை சேதுவிநாயகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சேதுவிநாயகம் ஒரு எழுத்தாளர். தற்போது அவர் கதை போன்ற ஒன்றை ஆர்வமாய் எழுதிக்கொண்டிருக்கிறார்.. அதில்..
ஆத்மா சென்னையில் வசிக்கும் பணக்காரர்களில் ஒருவன். அடிக்கடி மும்பை, கொல்கத்தா, டில்லி, சில சமயம் வெளிநாடுகளுக்கு கூட சென்று வரவேண்டியிருக்கும் ஒரு நடுத்தர பிஸ்னஸ்மேன். இந்த கதை இவன் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனான்? அவனது பிஸ்னஸ் என்ன? இந்த உயரத்தை அடைய அவன் கையாண்ட வழி என்ன? என்பதையெல்லாம் பற்றியதல்ல.
நமக்குத் துன்பம் வரப்போவதை இயற்கை முன்கூட்டியே சில எச்சரிக்கைகளின் மூலம் நமக்கு அறிவிக்கிறது. அதை விழிப்புடன் கவனித்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் அதை கண்டுகொள்ளாதவாறு நம் வாழிவின் அவசர ஓட்டமும், ஒரு செயல் மீது கொண்டுள்ள மோகமும் தடுத்துவிடுகிறது. அது நம்மை கவனிக்க விடுவதில்லை
ஆத்மாவுக்கு அதுதான் நேர்ந்தது. அன்று அவன் தன் மனைவியுடன் உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. கம்பார்ட்மென்டில் 12 நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்தாகிவிட்டது. இரவு ட்ரெயின். ஆனால் அன்று காலை அவனுக்கு திடீரென அலுவல் காரணமாக மும்பை செல்ல வேண்டிய கடடாயம் ஏற்பட்டது. உறவினரும் மிக நெருங்கியவர். வேலையும் கொஞ்சம் முக்கியமானது. மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் மும்பை செல்வதென முடிவெடுத்தான். அங்கு அவன் அந்த செயலின் மீது கொண்டிருந்த மோகம் தலைதூக்கி சாவு வரை இழுத்தது.
கதை எழுதிக் கொண்டிருந்த சேதுவிநாயகத்திற்கு சிகரெட் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு தீப்பெட்டியைத் தேடினார். அது மேசையின் மூலையில், மெழுகுவர்த்தியின் அருகில் இருந்தது. ஒன்றையெடுத்து பற்ற வைத்தார். இல்லையில்லை.. பற்ற வைக்க முயன்றார். அதற்குள் குச்சி இரண்டாக உடைந்தது.
அடுத்ததை எடுத்து பெட்டியில் உரச அது பற்றவேயில்லை. உற்றுகவனித்த போதுதான் அந்த குச்சியின் இரண்டு புறங்களிலும் மருந்து இல்லாதது தெரியவந்தது. வெறுப்போடு தீப்பெட்டியையும், குச்சியையும் கீழே எரிந்துவிட்டு யோசித்தார். மற்றொரு தீப்பெட்டியை எடுக்க சமையலறை வரை செல்ல இஷ்டமில்லாமல் மறுபடி தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.
ஆத்மாவிற்கு அன்றைய ப்ளைட்டிலேயே டிக்கெட் கிடைக்க சில நூறுகளை அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவன் மனைவி மட்டும் தனியே திருமணத்திற்கு செல்வதென முடிவாயிற்று. அன்று டிரைவருக்கு உடம்பு சரியில்லாததால் அவன் வரவில்லை. ஆத்மாவே காரை ஓட்டிக்கொண்டு போக வேண்டி வந்தது. வாசலை கடக்கும் போது குறுக்கே போன பூனையை அவன் கண்டு கொள்ளவில்லை. பாதி வழியில் செல்லும் போது காரின் முன் டயர் பஞ்சர் ஆனது. அதை ஒர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டு, ஆட்டோ பிடித்து விமானநிலையத்தை அடையும் போது விமானம் அரைமணி நேரம் லேட் என்ற செய்தி காதை எட்டியது. ஒரு மணி நேரம் கழித்து பல ‘சோதனை’களுக்குப் பின் விமானம் கிளம்பியது. பாதிவழியில் சென்று கொண்டிருந்த விமானம், அவர்கள் யாரும் எதிர்பாராமல், நீங்கள் எதிர்பார்த்தபடியே கோளாராகி வெடித்து சிதறியது. இதற்கு காரணம் என்ன?
இந்த கதையின் மூன்றாவது பாராவை படியுங்கள் தெரியும்.
சேதுவிநாயகம் ஏறத்தாழ எழுதி முடித்துவிட்டார். பஞ்சிங் செய்து பைலில் சேர்க்க வேண்டும் அவ்வளவு தான். அப்போது தான் அவர் கண்ணில் அந்த சிகரெட் மீண்டும் பட்டது. மறுபடி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு மேசையின் உள்ளிருக்கும் லைட்டர் நினைவுக்கு வரவே, அதை எடுத்து ஓரிரு முயற்சிக்குப் பின் சிகரெட்டை பற்றவைத்தார். சமையறை கேஸ் சிலிண்டர் லீக்காகி வீடு முழுவதும் கேஸ் பரவியிருப்பதை உணராமல்..
ஆத்மா சென்னையில் வசிக்கும் பணக்காரர்களில் ஒருவன். அடிக்கடி மும்பை, கொல்கத்தா, டில்லி, சில சமயம் வெளிநாடுகளுக்கு கூட சென்று வரவேண்டியிருக்கும் ஒரு நடுத்தர பிஸ்னஸ்மேன். இந்த கதை இவன் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனான்? அவனது பிஸ்னஸ் என்ன? இந்த உயரத்தை அடைய அவன் கையாண்ட வழி என்ன? என்பதையெல்லாம் பற்றியதல்ல.
நமக்குத் துன்பம் வரப்போவதை இயற்கை முன்கூட்டியே சில எச்சரிக்கைகளின் மூலம் நமக்கு அறிவிக்கிறது. அதை விழிப்புடன் கவனித்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் அதை கண்டுகொள்ளாதவாறு நம் வாழிவின் அவசர ஓட்டமும், ஒரு செயல் மீது கொண்டுள்ள மோகமும் தடுத்துவிடுகிறது. அது நம்மை கவனிக்க விடுவதில்லை
ஆத்மாவுக்கு அதுதான் நேர்ந்தது. அன்று அவன் தன் மனைவியுடன் உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. கம்பார்ட்மென்டில் 12 நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்தாகிவிட்டது. இரவு ட்ரெயின். ஆனால் அன்று காலை அவனுக்கு திடீரென அலுவல் காரணமாக மும்பை செல்ல வேண்டிய கடடாயம் ஏற்பட்டது. உறவினரும் மிக நெருங்கியவர். வேலையும் கொஞ்சம் முக்கியமானது. மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் மும்பை செல்வதென முடிவெடுத்தான். அங்கு அவன் அந்த செயலின் மீது கொண்டிருந்த மோகம் தலைதூக்கி சாவு வரை இழுத்தது.
கதை எழுதிக் கொண்டிருந்த சேதுவிநாயகத்திற்கு சிகரெட் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு தீப்பெட்டியைத் தேடினார். அது மேசையின் மூலையில், மெழுகுவர்த்தியின் அருகில் இருந்தது. ஒன்றையெடுத்து பற்ற வைத்தார். இல்லையில்லை.. பற்ற வைக்க முயன்றார். அதற்குள் குச்சி இரண்டாக உடைந்தது.
அடுத்ததை எடுத்து பெட்டியில் உரச அது பற்றவேயில்லை. உற்றுகவனித்த போதுதான் அந்த குச்சியின் இரண்டு புறங்களிலும் மருந்து இல்லாதது தெரியவந்தது. வெறுப்போடு தீப்பெட்டியையும், குச்சியையும் கீழே எரிந்துவிட்டு யோசித்தார். மற்றொரு தீப்பெட்டியை எடுக்க சமையலறை வரை செல்ல இஷ்டமில்லாமல் மறுபடி தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.
ஆத்மாவிற்கு அன்றைய ப்ளைட்டிலேயே டிக்கெட் கிடைக்க சில நூறுகளை அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவன் மனைவி மட்டும் தனியே திருமணத்திற்கு செல்வதென முடிவாயிற்று. அன்று டிரைவருக்கு உடம்பு சரியில்லாததால் அவன் வரவில்லை. ஆத்மாவே காரை ஓட்டிக்கொண்டு போக வேண்டி வந்தது. வாசலை கடக்கும் போது குறுக்கே போன பூனையை அவன் கண்டு கொள்ளவில்லை. பாதி வழியில் செல்லும் போது காரின் முன் டயர் பஞ்சர் ஆனது. அதை ஒர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டு, ஆட்டோ பிடித்து விமானநிலையத்தை அடையும் போது விமானம் அரைமணி நேரம் லேட் என்ற செய்தி காதை எட்டியது. ஒரு மணி நேரம் கழித்து பல ‘சோதனை’களுக்குப் பின் விமானம் கிளம்பியது. பாதிவழியில் சென்று கொண்டிருந்த விமானம், அவர்கள் யாரும் எதிர்பாராமல், நீங்கள் எதிர்பார்த்தபடியே கோளாராகி வெடித்து சிதறியது. இதற்கு காரணம் என்ன?
இந்த கதையின் மூன்றாவது பாராவை படியுங்கள் தெரியும்.
சேதுவிநாயகம் ஏறத்தாழ எழுதி முடித்துவிட்டார். பஞ்சிங் செய்து பைலில் சேர்க்க வேண்டும் அவ்வளவு தான். அப்போது தான் அவர் கண்ணில் அந்த சிகரெட் மீண்டும் பட்டது. மறுபடி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு மேசையின் உள்ளிருக்கும் லைட்டர் நினைவுக்கு வரவே, அதை எடுத்து ஓரிரு முயற்சிக்குப் பின் சிகரெட்டை பற்றவைத்தார். சமையறை கேஸ் சிலிண்டர் லீக்காகி வீடு முழுவதும் கேஸ் பரவியிருப்பதை உணராமல்..
Subscribe to:
Posts (Atom)